Saturday 4th of May 2024 09:41:53 PM GMT

LANGUAGE - TAMIL
ஓய்வுபெறும் எண்ணம் இல்லை!

ஓய்வுபெறும் எண்ணம் இல்லை!


தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவைசெய்யும் மனப்பாங்குடன் தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பிற்பகல் பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்தக் கருத்தை தேர்தலுக்காக சொல்லவில்லை, தேர்தல் முடிந்த பின்னரும் அதாவது டிசம்பர் மாதத்திற்கு பின்னரும் எனது அபிவிருத்தி செயற்பாடுகள் தொடரும். மாவட்ட ரீதியான அபிவிருத்தியே முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை இசிப்பத்தான நலன்புரி சங்கத்தின் சனசமூக நிலையத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்றது.

பொலன்னறுவை இசிப்பத்தான விகாராதிபதி சங்கைக்குரிய உடகம தம்மானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE